03rd March 2025 12:18:26 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய வழங்கல் கட்டளையின் கீழ் உள்ள படையினர் 2025 பெப்ரவரி 25 அன்று தியத்தலாவை முத்துக்குமாரு மைதானத்தில் எல்லே போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் மத்திய வழங்கல் கட்டளை தளபதி பிரிகேடியர் ஏ.ஏ.ஆர். அபேசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இறுதிப் போட்டியில், 11 வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி போட்டியிட்டதுடன், இதில் 11 வது பொறியியல் சேவைகள் படையணி சாம்பியனாக தெரிவானது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.