01st June 2023 20:06:58 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 'நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்' தொடர்பான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (மே 30) தலைமையக வளாகத்தில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது.
இந்த செயலமர்வை பதுளை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் ஆய்வு அதிகாரி எம்எச்எம் ரிபாஜ் அவர்கள் நடாத்தினார். நுகர்வோரின் உரிமைகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பொறுப்புகள் குறித்து அவர் செயலமர்வில் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.