Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th September 2024 11:28:31 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் தியத்தலாவை, மாகாண ஆயுர்வேத வைத்தியசாலையில் சிரமதானம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 27 செப்டம்பர் 2024 அன்று தியத்தலாவை, மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

17 வது பொறியியல் சேவைகள் படையணியின் உதவியுடன் மத்திய பாதுகாப்பு படையினர் இத்திட்டத்தை மேற்கொண்டனர். 01 அதிகாரி மற்றும் 50 சிப்பாய்கள் இந்த சிரமதான பணியை மேற்கொண்டதுடன், அவர்கள் மருத்துவமனையின் மின் மற்றும் குழாய் அமைப்புகளையும் ஆய்வு செய்தனர்.