27th November 2024 12:32:04 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 25 நவம்பர் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக பிரதான விரிவுரை மண்டபத்தில் நன்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு மாதிரித் தாள்கள் மற்றும் பயிற்சி புத்தகப் பொதிகள் வழங்கப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தரம் 2 முதல் 5 வரைக்கான மொத்தம் 160 தொகுதி மாதிரி தாள்கள், பயிற்சி புத்தக பொதிகளுடன் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.