07th August 2023 21:00:35 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 காலாட் படைப்பிரிவின் 112 காலாட் பிரிகேட்டின் 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியினரால் ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 06) ஹப்புத்தளை தங்கமலை பகுதியில் வேகமாகப் பரவிய தீ அணைக்கப்பட்டது.
கிடைத்த தகவலுக்கமைய அதிகாரிகள் உட்பட 16 இராணுவத்தினர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வேகமாக பரவிய தீயை சில மணி நேரங்களுக்குள் அணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் மேற்பார்வையில் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் இப் பணி முன்னெடுக்கப்பட்டது.