18th April 2023 22:25:22 Hours
கொழும்பு இசிபதன கல்லூரியின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, திங்கட்கிழமை (ஏப்ரல் 3) மாணவ தலைவர்களுக்கான சின்னம் வழங்கும் நிகழ்வில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ ஆர் எம் எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ ஆர் எம் எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் பாடசாலை மாணவ சிப்பாய் குழுவினால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து சின்னம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் உரையாற்றுகையில், தலைமைத்துவ பண்புகளை எடுத்துரைத்ததுடன் மாணவர்களின் தேசபக்தி மற்றும் ஒழுக்கம் தொடர்பில் வலியுறுத்தினார். மேலும் தனது பாடசாலை நாட்களின் நினைவுகளை நினைவு கூர்ந்த அவர், கல்லூரியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.