17th April 2023 18:15:02 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வை பொரளையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (11) கொண்டாடினர்.
இப் புத்தாண்டு நிகழ்வில் பல சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய நிகழ்வுகள், கயிறு இழுத்தல், "அவுருதுகுமாரி" (புத்தாண்டு அலகுராணி) தேர்வு, யானைக்கு கண் வைப்பது, பனிஸ் உண்ணுதல் போன்ற பல விளையாட்டுகள் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படை தளபதியுமான மேஜர் ஜெனரல் யு டி விஜேசேகர ஆர் டிபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சியாமலி விஜேசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு இப் போட்டிகள் மற்றும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கினர்.
இப் புத்தாண்டு கொண்டாட்டமானது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படை தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்துடன் இணைந்து இந் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் யு டி விஜேசேகர ஆர் டிபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பிஎஸ்சி, திருமதி சியாமலி விஜேசேகர மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் நிலைய தளபதியான பிரிகேடியர் ஜே.கே.ஆர்.ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர்களால் படையணி தலைமையகத்தில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கும் இலங்கை இராணுவ மகளிர் படையணியினருக்கும் சிறப்பு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.