02nd April 2024 10:02:19 Hours
பொறியியல் சேவை படையணியில் 26 மார்ச் 2024 அன்று பொறியியல் சேவை படையணி அதிகாரிகள் உணவக கழக விரிவுரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஏ.இ.டி. விஜேந்திர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் விருந்தினர் விரிவுரையாளராக கலந்துகொண்டு, “தற்கால இலங்கை அதிகாரிகள்” என்ற தலைப்பில் பெறுமதிமிக்க உரையை நிகழ்த்தினார்.
நிகழ்வின் முடிவில் நிதி முகாமைத்துவம் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் விருந்தினர் பேச்சாளருக்கு சிறப்பு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொறியியல் சேவை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.