04th July 2024 21:50:27 Hours
வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.ஏ.முரளீதரன் அவர்கள் தலைமையில் 2024 ஜூலை 2 ஆம் திகதி கறுவா நடுகை மற்றும் கன்று விநியோக நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ எஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
562 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.