04th June 2025 11:22:53 Hours
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 02 ஆம் திகதி ரத்மலானை 4 வது (தொ) இலங்கை பொறியியல் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழுப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், படையணியின் கடமைகள் மற்றும் தற்போதைய திட்டங்கள் குறித்து கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்.பீ.யூ. தசநாயக்க யூஎஸ்பீ அவர்களினால் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
படையினரிடையே உரையாற்றிய படையணியின் படைத் தளபதி, ஒழுக்கம், தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை வலியுறுத்தினார். அதே நேரத்தில் சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தவிர்க்க அனைத்து நிலையினரையும் ஊக்குவித்தார். அரசாங்கத்தின் தூய இலங்கை திட்டத்திற்கு இராணுவத்தின் ஆதரவையும் அவர் எடுத்துரைத்தார்.
அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் மற்றும் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் கையொப்பமிடுதலுடன் விஜயம் முடிந்தது.