16th November 2019 19:27:44 Hours
இம் மாதம் (15) ஆம் திகதி நொஹென்பிடி 4- ஆம் மாடி அன்டர்ஷன் தொடர் மாடிக்கட்டிடத்தில் புதிதாய் இராணுவத்திலுள்ள இராணுவ அதிகாரபூர்வமற்ற உத்தியோகத்தர்களுக்காக நிர்மானிக்கப்பட்டு 16 குடியிருப்புக்கள் இராணுவ உத்தயோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
புதிதாய் நிர்மானிக்கப்பட்ட இந்த விவாக விடுதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா செல்ஷன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன. மேலும் 24 இராணுவ விவாக குடியிருப்புக்கள் மீள்நிர்மானிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த கட்டிட திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க மற்றும் இராணுவ தங்குமிட பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் வரவேற்றனர்.
அத்துடன் இராணுவத்தில் NVQ பயிற்சிகளை நிறைவு செய்த 137 படையினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா , இராணுவ ஊடக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Sneakers | Jordan Shoes Sale UK