Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2025 13:42:32 Hours

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 243 வது காலாட் பிரிகேட் படையினருக்கு உரை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 03, அன்று தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார்.

தனது விஜயத்தின் போது, 243 வது காலாட் பிரிகேட் படையினருக்கு உரையாற்றிய அவர், தற்போதைய பாதுகாப்பு நிலைமையகள் மற்றும் பொறுப்பான பகுதியில் ஏதேனும் அவசரநிலைகளுக்கு திறம்பட பதிலளிக்க படைகளின் தயார்நிலை குறித்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் முப்படைகள் மற்றும் பொலிஸார், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.