12th May 2023 18:55:46 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் படையிருடன், கட்டளைப் படையலகுகள் இணைந்து திங்கட்கிழமை (05) பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவில் வண்ணமயமான வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்தனர்.
வெசாக் தினத்தன்று (மே 05) 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி வெசாக் கூடுகளின் விளக்குகளை ஔிர வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தார். 10 வது கஜபா படையணி மற்றும் 5 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி பொது மக்களை ஈர்க்கக்கூடிய வண்ணம் வெசாக் கூடுகளை வடிவமைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். இத் திட்டத்தின் கீழ் பார்வையாளர்களுக்கு கொத்தமல்லி பானம், பிஸ்கட்களை படையினர் வழங்கினர்.