Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2024 13:56:32 Hours

படையணிகளுக்கிடையிலான வலைப்பந்து போட்டி – 2024 இல் இலங்கை இராணுவ சேவைப் படையணிக்கு சாம்பியன்ஷிப்

பனாகொடையில் 28 செப்டம்பர் 2024 அன்று நடைப்பெற்ற படையணிக்களுக்கிடையிலான வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி -2024 இல் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் அணி வெற்றியீட்டியது.

இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் அணி, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 'ஏ' அணியை தோற்கடித்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.

இப்போட்டியில் பல்வேறு இராணுவப் படையணிகளைச் சேர்ந்த ஐந்து அணிகள் பங்கேற்றன. பிரதம அதிதி கலந்துகொண்ட அனைவரையும் பாராட்டி விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசில்களை வழங்கினார். இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.கே.எஸ்.பீ சேனாரத்ன அவர்கள் சிறந்த வலைப்பந்து வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியில் விருது பெற்றவர்கள்:

- சிறந்த வளர்ந்து வரும் வீரர் : கோப்ரல் ஏ.எல்.எஸ் அபேகொட

- சிறந்த வீச்சாளர் : கோப்ரல் ஆர்.டி.ஜி. வாசனா

- சிறந்த மத்திய விளையாட்டாளர்: கேப்டன் டி.ஏ.எம்.டி தென்னகோன்

- சிறந்த பாதுகாப்பாளர் : லான்ஸ் கோப்ரல் டி.ஏ.எஸ்.என் பாலசூரிய

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வை நேரில் பார்வையிட்டனர்.