Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2024 17:11:35 Hours

படையணிகளுக்கிடையிலான கரப்பந்து சாம்பியன்ஷிப் - 2024

இராணுவ கரப்பந்து கழக தலைவரான வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை விஷேட படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 25 ஜூலை 2024 அன்று பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் படையணிகளுக்கிடையிலான இராணுவ கரப்பந்து சம்பியன்ஷிப் போட்டி- 2024 நடைபெற்றது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இலங்கை பீரங்கி படையணி மற்றும் இலங்கை இராணுவ போர்கருவி படையணி வீர்ர்களின் இறுதி போட்டியினை நேரில் பார்வையிட்டார்.

2024 ஜூன் 25 முதல் 2024 ஜூலை 02 வரை பனாகொடையில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு இராணுவ படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 19 ஆண் அணிகளும், 04 மகளிர் அணிகளும் பங்குபற்றனர்.

இப்போட்டியில் இலங்கை பீரங்கி படையணி வீரர்கள் சாம்பியன் பட்டத்தினை பெற்றதுடன் இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் இலங்கை சிங்க படையணி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டன.

போட்டியின் சிறப்பம்சமாக இறுதிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி வீரர்கள் 'ஏ' பிரிவு இறுதி போட்டியில் போட்டியிட்டனர்.

இலங்கை இராணுவ சேவை படையணி அணி ‘ஏ’ பிரிவு கோப்பையை வென்றதுடன், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி அணி முறையே போட்டித் தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.

இப்போட்டியில், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் ‘ஏ’ பிரிவில் போட்டியிட்டனர். இப் போட்டியில் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி வெற்றி பெற்று, ‘ஏ’ பிரிவு கோப்பையை உறுதி செய்ததுடன் இராணுவ மகளிர் படையணி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை பிரதம அதிதி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்கள் உட்பட ஒரு புகழ்பெற்ற குழுவால் போட்டி மத்தியஸ்தம் வகிக்கப்பட்டது. இலங்கை கரப்பந்து நடுவர்கள் சங்கத்தின் உறுப்பினரான மத்தியஸ்தர் கபில பன்நாயக்க தலைமையில் இந்த குழு, நிகழ்வு முழுவதும் உயர் தர மத்தியஸ்த்தை உறுதி செய்தது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இராணுவ விஷேட படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, கரப்பந்து குழுவின் துணைத் தலைவர்- பிரிகேடியர் டபிள்யூ.டபிள்யூ.கே. ரோஹன் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கரப்பந்து ரசிகர்கள் போட்டியைக் கண்டுகளித்தனர்.

போட்டியாளர்களின் தனிப்பட்ட செயல்திறன் பின்வருமாறு:

சிறந்த வீரர் – இலங்கை பீரங்கி படையணியின் லான்ஸ் பொம்பார்டியர் பீஎம்சி கலும்ரத்ன

சிறந்த அறைதல் வீரர் – இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் கோப்ரல் கலைச்செல்வம்