Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2023 22:00:30 Hours

நீர்கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி மற்றும் செல்லகந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையினர் வெள்ளிக்கிழமை (5) உடனடி உதவிகளை மேற்கொண்டனர்.

மாவட்டச் செயலக ஊழியர்களுடன், 03 அதிகாரிகள் மற்றும் 23 சிப்பாய்கள் வெள்ளத்தால் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். மேலும் பத்து நபர்களுக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 14 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎன்ஆர்என்கே ஜெயமான்ன ஆர்டபிள்யூபீ, 141 வது காலாட் பிரிகேட் தளபதி எல்ஜிபி காரியவசம் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, ஆகியோர் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

மேலும், 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்ஏ உடரடகே, அவர்கள் அவசரகால மீட்பு பணியில் ஈடுபட்ட படையினர்களை மேற்பார்வையிட்டார்.