26th May 2025 10:46:02 Hours
“தூய இலங்கை" திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1,000 பாடசாலைகளை புனரமைக்கும் திட்டம் இன்று (2025 பெப்ரவரி 20) இலுகோவிட்ட மேமா/ஹோ/இலுகோவிட்ட கனிஷ்ட பாடசாலையில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதிபர் திரு. வசந்த உதயசிறி வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் இராணுவத் தளபதி அடிக்கல் நாட்டினார். இது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளின் உத்தியோகப்பூர்வ ஆரம்பமாகும்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.