Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2024 22:02:08 Hours

தேசிய பேஷ் போல் போட்டி 2024 இல் இலங்கை இராணுவ மகளிர் அணி வெற்றி

2024 டிசம்பர் 01 ஆம் திகதி தியகம பேஷ் போல் மைதானத்தில் இலங்கை கடற்படை மகளிர் அணியை 18 க்கு 8 புள்ளிகள் என்ற அடிப்படையில் தோற்கடித்து இலங்கை இராணுவ மகளிர் பேஷ் போல் அணி தேசிய லீக் பேஷ் போல் போட்டி - 2024 இன் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

2024 செப்டெம்பர் 01 ஆம் திகதி இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ பேஷ் போல் குழுவின் தலைவரும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ அணி போட்டியில் பங்குபற்றியது.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக லான்ஸ் கோப்ரல் எம்.எம்.ஜி.ஜி கயானி பண்டார அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சார்ஜன் கே.எம்.எஸ்.எஸ் விமலரத்ன சிறந்த துடுப்பாட்ட விருதையும், கோப்ரல் டபிள்யூ.என் சமன்மலி சிறந்த தடுப்பாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த போட்டியை கண்டுகளிக்க சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.