17th July 2024 18:37:51 Hours
22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமையின் கீழ், “தளபதி சவால் கிண்ண காற்ப்பந்து போட்டி 2024” ஜூலை 12 முதல் 16 வரை கெசல்துடுவ முகாம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் படைப்பிரிவு தலைமையகம், பிரிகேட் தலைமையகங்கள் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள படையலகுகள் அடங்கிய பத்து குழுக்கள் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் 22 வது காலாட் படைப்பிரிவு அணியும் 2 வது (தொ) கஜபா படையணி அணியும் மோதியதில் 2 வது (தொ) கஜபா படையணி வெற்றி பெற்றது.
பிரிகேட் தளபதிகள், படையலகு கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.