Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th May 2025 12:18:48 Hours

சிவனொளிபாதமலை யாத்திரை வெசாக் போயா தினத்துடன் நிறைவு

உலகம் முழுவதும் உள்ள மக்களால் போற்றப்படும் சிவனொளிபாதமலையின் (ஸ்ரீ பாதஸ்தானாய) யாத்திரை காலம், வெசாக் போயா தினமான 2025 மே 12 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

மறுநாள், சிவனொளிபாதமலை மேல்அறையிலிருந்து நல்லதன்னிய வரை ஸ்ரீ சுமன சமன் தேவர் சிலை, நினைவுச்சின்ன கலசம் மற்றும் தெய்வ ஆபரணங்களை இறக்கும் புனித விழா நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் இதன் போது கலந்து கொண்டார்.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.