Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2024 17:51:35 Hours

சிரேஷ்ட அதிகாரவானையற்ற அதிகாரிகளுக்கான புதிய இரண்டு மாடி விடுதி கட்டிடம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் 28 ஆகஸ்ட் 2024 அன்று படையணி அதிகாரவானையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்திற்கான புதிய இரண்டு மாடி விடுதி கட்டிடத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிய வசதி கட்டிடமானது முகாமின் தங்குமிடத் தேவைகளை பூர்த்தி செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றை இலக்காக கொண்டு மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அடிகல் நாட்டப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.