18th March 2024 16:33:48 Hours
பூவெலிக்கடை சமிக்ஞை பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் எம்.ஏ.கே ஜயவர்தன பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையில் 'இலங்கை இராணுவப் போர் இலக்கியம்' மற்றும் 'வீரப் பாதுகாவலர்' என்ற தலைப்பில் விரிவுரை 15 மார்ச் 2024 அன்று நடாத்தப்பட்டது.
ரணவிருவா இதழின் ஆசிரியரான லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.எஸ் சாமிந்த அவர்கள் இராணுவ இலக்கியம் பற்றிய நுண்ணறிவை வழங்கியதுடன், போர்க்கால அனுபவங்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த விரிவுரையில் 20 அதிகாரிகளும் 250 சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.