Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th August 2024 22:15:22 Hours

கொலங்கஸ்வெவ குடும்பத்திற்காக படையினரால் புதிய வீடு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொலங்கஸ்வெவ பெரிமியங்குளத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்று இலங்கை 4 வது தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 9 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. 2024 ஆகஸ்ட் 16 அன்று இவ் வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது. வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம். பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த திட்டத்திற்கு நிதியுதவியினை டாக்டர் ஜினஞ்சலா ஷனிகா விஜயகுணசேகர அவர்களின் மகள் டாக்டர் தருசி தில்ஹாரா பெரேரா அவர்களினால் வழங்கப்பட்டது.