Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2025 15:29:31 Hours

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 07 அன்று பாடசாலை பைகள் விநியோகம்

10 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர் மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் பிரதான கட்டிடத்தின் புனரமைப்பு மற்றும் வகுப்பறை கட்டிடங்களை பூச்சு பூசுதல் ஆகியவற்றை நிறைவு செய்தனர். புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் உத்தியோகபூர்வமாக மாணவர்களிடம் 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டன. மேலும் புத்தக நன்கொடை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 பாடசாலை பைகள் விநியோகிக்கப்பட்டன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கையர்களின் நிதியுதவியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.