11th May 2025 15:45:20 Hours
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதியாக பிரிகேடியர் எச்ஏஏஎன்சீ பிரபாத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2025 மே 08 அன்று தியதலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
பின்னர், புதிய தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டினார். அதனைத் தொடர்ந்து அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றிய அவர் படசாலைக்கான தனது எதிர்கால திட்டங்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.