Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2025 19:35:13 Hours

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை ஸ்னைப்பர் பாடநெறி நிறைவு

தியத்தலாவ குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் 2025 ஜனவரி 25, ஸ்னைப்பர் பயிற்சி பாடநெறி -22 சின்னம் வழங்கல் மற்றும் விடுகை அணிவகுப்பு விழாவுடன் நிறைவடைந்தது.

இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தெலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக பங்குபற்றினார்.

பிரதம விருந்தினர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, பட்டதாரிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஐந்து அதிகாரிகள், பதினொரு சிப்பாய்கள் மற்றும் மாலைத்தீவைச் சேர்ந்த ஆறு சிப்பாய்கள் ஸ்னைப்பர் வீரர்களாக தகுதி பெற்றனர். பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தலைமை விருந்தினரால் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:

• களத்தில் சிறந்த மாணவர் - இந்திய இராணுவத்தின் என்.கே. வீர் சிங்

• சிறந்த உடற்தகுதி – விஷேட படையணியின் கோப்ரல் டீ.எம்.டி.எஸ்.பி. இலங்கரத்ன

• சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் - இலங்கை இலேசாயுத காலாட்படையின் லான்ஸ் கோப்ரல் ஆர்.பீ நுவான்

• சிறந்த வெளிநாட்டு மாணவர் - இந்திய இராணுவத்தின் என்.கே. வீர் சிங்

• சிறந்த ஸ்னைப்பர் வீரர் – விஷேட படையணியின் கேப்டன் ஏ.எம்.ஆர்.கே.கே. முல்லேகம

மேலும் 2025 ஜனவரி 26, அன்று, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் ஆர்.பீ. முனிப்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் நிறைவு உரை நிகழ்த்தப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.