15th May 2025 16:48:15 Hours
கிழக்கு பாதுகாப்பு படையினர் வெலிகந்தையில் 2025 மே 12 ஆம் திகதி வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆக்கப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட வெசாக் கூடுகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்கும் தான நிகழ்வு ஆகியவை அடங்கியிருந்தது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு ஏராளமான பொதுமக்களை ஈர்த்தது.
233 வது காலாட் பிரிகேட் படையினரால் 2025 மே 12 அன்று திருகோணமலை வீதியில் வெசக் கடலை தானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.