Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2024 20:47:02 Hours

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும் உதைபந்தாட்டப் போட்டி

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில், 551 வது காலாட் பிரிகேட் மற்றும் 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் 2024 மே 14 முதல் 17 வரை உதைபந்தாட்ட போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வின் நிறைவு 17 மே 2024 அன்று கிளிநொச்சி விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றது.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப் போட்டியில் வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவானது.