14th March 2024 17:01:18 Hours
கற்பித்தல் முறைமை பாடநெறி – 72’க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024 மார்ச் 12 ஆம் திகதி அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.
போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அதன்படி, 140 அதிகாரவாணை அதிகாரிகள் 2024 பெப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் ஒரு மாத கால பாடநெறியினை நிறைவு செய்தனர்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.எம்.ஏ.எம் கருணாதிபதிக்கு பாடநெறியின் சிறந்தவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், லெப்டினன் கேணல் ஆர்எம்டீ நிஸ்ஸங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றினர்.