05th June 2025 15:10:04 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து 35 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவபிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஜூன் 05, அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவபிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1990 ஜனவரி 09 ஆம் திகதி பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1991 ஜூன் 15 அன்று இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கவச வாகன படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2023 மே 18 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி, 2025 ஜூன் 13 ஆம் திகதி நிரந்தர படையில் இருந்து தனது 55 வயதில் ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் இராணுவத் தலைமையக உபகரண பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.
தனது பணிக்காலம் முழுவதும், மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவபிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 1வது மற்றும் 3வது புலனாய்வு இலங்கை கவச வாகன படையணியின் குழு தலைவர், 3வது புலனாய்வு செபர் பிரிவின் இரண்டாம் கட்டளைத் அதிகாரி மற்றும் அதிகாரி கட்டளை, 3வது புலனாய்வு இலங்கை கவச வாகன படையணியின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்) நிலையத்தில் தொழிநுட்ப நிறைவேற்று அதிகாரி, 5வது புலனாய்வுப் படையணியின் தலைமையகப் பிரிவின் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிலிளவல் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளராகவும் அதிகாரி கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றினார். 6வது புலனாய்வு படையணி தலைமையகப் படைப்பிரிவின் அதிகாரி, 8வது (வலுவூட்டல்) படைப்பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 1வது புலனாய்வு படையணியின் பதில் கட்டளை அதிகாரி மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி, மற்றும் இலங்கை கவச வாகன படையணியின் 8வது (வலுவூட்டல்) மற்றும் 5வது புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி ஆகிய குறிப்பிடத்தக்க நியமனங்களை வகித்துள்ளார்.
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதியாகவும்,இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு தளபதியாகவும் அவர் பணியாற்றினார். மேலும் அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளராகவும், படையணியின் பதில் நிலைய தளபதியாகவும், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக கேணல் பொது பணி, 511வது காலாட் பிரிகேட் தளபதி, படையணி நிலைய தளபதி, 22 காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியாவும், அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு மையம் பணிப்பாளர் மற்றும் 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன் இறுதியாக இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியாகவும் இராணுவத் தலைமையகத்தில் உபகரண பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகின்றார்.
அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி அவருக்கு உத்தம சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவப் பயிற்சி பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். உள்நாட்டில், இளம் அதிகாரிகள் பாடநெறி, இரண்டாம் நிலை தளபதிகள் புத்தாக்கப் பாடநெறி, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய தகவல் அமைப்புகள் நிர்வாகச் சான்றிதழ் சிறப்புப் பாடநெறி, இராணுவக் கட்டளை மற்றும் பணி நிலை பாடநெறி, சட்டம் மற்றும் ஆயுதபோர் பாடநெறி, சாத்தியமான படையலகு கட்டளை அதிகாரிகள் பாடநெறி, ஐநா சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பாடநெறி, பயிற்சியாளர்களுக்கான சர்வதேச மனிதாபிமான சட்டப் பயிற்சி பாடநெறி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி ஆகியவை இதில் அடங்கும்.
அவரது சர்வதேச பயிற்சியில் இந்தியா வாகன பராமரிப்பு பயிற்றுவிப்பாளர் அதிகாரிகள் பாடநெறி மற்றும் போர் குழுத் தளபதிகள் பாடநெறி, பாகிஸ்தான் இளம் அதிகாரிகள் (கவச) பாடநெறி மற்றும் இந்தியாவில் போர் குழுத் தளபதிகள் பாடநெறி ஆகியவை அடங்கும்.
சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
2005 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் வெளிநாட்டு ஆய்வு சுற்றுப்பயணம் உட்பட பல ஆய்வு சுற்றுப்பயணங்களிலும் அவர் பங்கேற்றார். 2008 ஆம் ஆண்டு தாங்கி ஆய்வுடன் இணைந்து செக் குடியரசிற்கு விஜயம் செய்தார், 2018 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய சிவில் விவகாரங்கள் விடய நிபுணர் பரிமாற்றத்தில் (மெய்நிகர்) பங்கேற்றுள்ளார், 2021 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் பரந்த பாதுகாப்பு சூழலில் (மெய்நிகர்) பாதுகாப்பை நிர்வகிப்பதற்கான பயிற்சித் திட்டத்திலும், 2024 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கான பொருளாதார அனர்த்த தடுப்பு மற்றும் தணிப்பு ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கிலும் கலந்து கொண்டுள்ளார்.