Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2024 12:48:09 Hours

ஐ.நா பணி நிலை அதிகாரி பாடநெறி எண் 03 நிறைவு

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சீஏ ராஜபக்‌ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஐ.நா பணி நிலை அதிகாரி பாடநெறி எண் 03 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2024 மார்ச் 11 முதல் 27 வரை இடம்பெற்றது.

பாடநெறியின் நிறைவு விழா 27 மார்ச் 2024 அன்று இடம்பெற்றதுடன் இலங்கை இராணுவத்தின் 23 மாணவர் அதிகாரிகளும், இலங்கை கடற்படையின் 03 மாணவர் அதிகாரிகளும், பங்களாதேஷ், மலேசியா, மங்கோலியா, நேபாளம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு வெளிநாட்டு மாணவர் அதிகாரிகளும் இப்பாடநெறியில் கலந்து கொண்டனர்.

பதில் பொது பணி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ வழங்கல் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவன தளபதியின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், அவர் ஐநா பணி நிலை அதிகாரி மாணவ அதிகாரிகளுடன் குழு படம் எடுத்து கொண்டதுடன் பயிற்சி உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்வதற்காக முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன் நிறுவனத்தின் உட்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்த வழிகாட்டுதலைகளையும் வழங்கினார்.

நிறைவு விழாவில் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.