Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd August 2023 22:15:18 Hours

ஐ.நா அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் 5வது அமைதி காக்கும் நிறுவன குழுவின் உபகரணங்களை ஆய்வு

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மாவில் சேவையாற்றும் இலங்கை அமைதி காக்கும் படையின் உபகரணங்ளை காவோ சூப்பர் முகாமில் செவ்வாய்க்கிழமை (25 ஜூலை 2023) ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

படையினர்களுக்காக நாட்டில் வழங்கப்படும் முக்கிய உபகரணங்கள் ஐநா தரநிலைகளின்படி மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சரிபார்க்க பாதுகாப்பு உபகரணங்கள் ஆய்வு, வழங்கள் ஆய்வு, மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வின் போது, வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், மருத்துவம், தங்குமிடம், நலன்புரி வசதிகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளின்படி உள்ளனவா என ஐ.நா ஆய்வுக் குழுவால் சரிபார்க்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் 5 வது அமைதி காக்கும் படையின் புதிய குழுவானது 01 ஜூலை 2023 முதல் மாலியில் அமைதி காக்கும் நடவடிக்கை பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது.