21st March 2024 13:10:53 Hours
பொறியியல் படையணியில் வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் பயிற்றுனர் குழுவினரால் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் படையினர்களுக்கு பயிற்சித் திட்டத்தை நடாத்துவதற்காக, இலங்கையில் இருந்து 20 மார்ச் 2024 அன்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் கோரிக்கைக்கு இணங்க மூன்று மாத பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கண்ணிவெடியை கையாளுதல், வெடிபொருள் முகாமை மற்றும் தொடர்புடைய விடயங்கள் ஆகியவற்றில் விரிவான திறன்களை கற்றுகொள்வதனை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
நான்கு அதிகாரிகள் மற்றும் மூன்று சிப்பாய்கள் என ஏழு பேர் கொண்ட குழுவிற்கு கட்டளையாளராக லெப்டினன் கேணல் ஜேஏசிஎஸ் ஜாகொட பீஎஸ்சீ அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர்கள் புறப்படுவதற்கு முன், பொறியியல் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுடன் முறையான சந்திப்பு இடம்பெற்றது.