01st May 2023 21:00:32 Hours
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, 2023 ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 142 வது காலாட் பிரிகேடின் இலங்கை பீரங்கிப் படையணியின் 15 வது ட்ரோன் படையினர் மீகொட தியான நிலைய வளாகத்தில் புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர்.
மீகொட தியான நிலையத்தின் பிரதமகுருவின் வேண்டுகோளுக்கிணங்க, 142 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் இலங்கை பீரங்கிப் படையணியின் 15 வது ட்ரோன் கட்டளை அதிகாரி ஆகியோரின் நெருங்கிய மேற்பார்வையின் கீழ் படையினர் இத்திட்டத்தின் போது வளாகத்தைச் சுத்தப்படுத்தி மாசுக்களைச் அப்புறப்படுத்தினர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி இந்த திட்டத்திற்கு ஆசிகளை வழங்கியிருந்தார்.