26th October 2024 15:14:20 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரிணி ரோட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 18 ஒக்டோபர் 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கி படையணி கோட்போர்கூடத்தில் வறிய சிப்பாய்களின் பிள்ளைகளுக்கான நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியுமான பிகேஜீஎம்எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் 30 பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள், பாதணிகள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் 70 பிள்ளைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான நிதி உதவிகளை படையினர் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கினர். இந்நிகழ்வில் தேநீர் விருந்து, படையினரின் பிள்ளைகளின் திறன் வெளிப்பாடுகள் மற்றும் மதிய உணவு ஆகியவை இடம்பெற்றன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள், மற்றும் பிள்ளைகள் பங்குங்குபற்றினர்.