09th February 2024 12:02:16 Hours
அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பயிற்சி தினம் 08 பெப்ரவரி 2024 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சித் திட்டத்தின்படி, பயிற்சி நாள் காலை உடற் பயிற்சியுடன் ஆரம்பமானது, அதைத் தொடர்ந்து படையணி தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் அணிநடை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வீரர்களுக்கு விலைமதிப்பற்ற அறிவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தொடர் விரிவுரை செயலமர்வுடன் பயிற்சி நாள் திட்டமிடப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தலைமையிலான இச்செயலமர்வில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பொறுப்புகள் தொடர்பான பல தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டன.