Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2023 20:10:45 Hours

இலங்கை சிங்கப் படையணி முன்னாள் படைவீரர் சங்கத்தின் 42வது ஆண்டு நிறைவு

இலங்கை சிங்கப் படையணி முன்னாள் படைவீரர் சங்கம் 28 மே 2023 அன்று தனது 42 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

உபகரண பணிப்பாளர் நாயகமும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும், இலங்கை சிங்கப் படையணியின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதம ஆலோசகருமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இலங்கை சிங்கப் படையணியின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு (ஓய்வு) அவர்கள் பிரதம அதிதியை வரவேற்றதுடன், அனைத்து முன்னாள் படைவீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக கடந்த கால பணிகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் நலன்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி திட்டமிட்டபடி அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மாலை சம்பிரதாயமான ஒன்றுகூடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.