31st May 2023 20:17:49 Hours
இலங்கை இராணுவத்தில் 33 வருடங்களுக்கும் மேலான புகழ்பெற்ற சேவையை நிறைவு செய்து ஓய்வுபெறும் பிரிகேடியர் ஜிஜிஏ குணசேகர யூஎஸ்பீ அவர்களுக்கு 2023 மே 25 அன்று இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினரால் பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க, பனாகொடை இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையக வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அன்றைய நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதன் பின்னர், படையணி நினைவுத் தூபியில், இலங்கை சமிக்ஞைப் படையணியின் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினரால் வழங்கப்பட்ட சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை பிரிகேடியர் ஜிஜிஏ குணசேகர யூஎஸ்பீ அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க அவர்களை சந்தித்தார். பின்னர், பிரிகேடியர் ஜிஜிஏ குணசேகர யூஎஸ்பீ அவர்கள் இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிதி பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையணியின் சிப்பாய்களும் பங்கு பற்றினர். அன்றைய சம்பிரதாயங்கள் அதிகாரிகளின் உணவகத்தில் பிரியாவிடை விருந்துடன் முடிவடைந்தது.