05th April 2024 14:32:12 Hours
இலங்கை கவச வாகன படையணியின் படையலகுகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டி -2024, ஆனது 2024 மார்ச் 27 ஆம் திகதி ரொக் ஹவுஸ் கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், 5 வது உளவுப் படையணி, 4 வது கவசப் வாகன படையணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இந்நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை கவச படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எம். பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்.
இப்போட்டி 26 மார்ச் 2024 அன்று ஆரம்பமாகியதுடன் ஆறு அணிகள் போட்டியில் பங்கேற்றன. இப் போட்டியில் 4 வது இலங்கை கவச படையணி 1 ஆம் இடத்தையும், 3 இலங்கை கவச படையணி 2 ஆம் இடத்தையும் பெற்றுகொண்டன.
இராணுவத் தளபதியின் வழிகாட்டலுக்கு இணங்க, பரிசளிப்பு விழாவின் போது சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கபடிபோட்டியில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் சிறந்த சாதனைகளைப் பாராட்டி லான்ஸ் கோப்ரல் ஜே.டி.டி.ஜி மதுசங்கவிற்கு ரூ. 30,000. பண பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.