24th June 2024 22:04:49 Hours
இலங்கை கராத்தே-டூ சம்மேளனம் 16 ஜூன் 2024 அன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை இராணுவ கராத்தே குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட இராணுவ வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 05 தங்கப் பதக்கங்கள், 05 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 08 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும், இராணுவ மகளிர் அணி 01 தங்கப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களுடன் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, கராத்தே விளையாட்டில் திறமையை வெளிப்படுத்தியது.