Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2024 14:16:30 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் புதிய தங்குமிட வளாகம் திறந்து வைப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் தளபதி உத்தியோகபூர்வ இல்லம் , வருகை தரும் கட்டளை அதிகாரிகளுக்கான தங்குமிட வளாகம் மற்றும் சிப்பாய்களுக்கான விடுமுறை பங்களா ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் கலந்து கொண்டார். இதன் திறப்பு விழா 2024 செப்டெம்பர் 04 இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.