Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2024 13:58:21 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தகுதியான வீரர்களுக்கு வீட்டுத் திட்டம்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் மேற்பார்வையில் ஒரு வீடு நிர்மாணிக்கும் பணி 6 ஜூலை 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியால் 15 செப்டம்பர் 2024 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து பணி நிலை சாஜன் கேஏ மஹாநாம அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.