Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2024 20:51:21 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி போர்வீரர்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் மேற்பார்வையுடன் 2024 செப்டம்பர் 07 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி போர்வீரர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தின் 2ம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆறு போர்வீரர்களுக்கு பல்வேறு படையலகுகளின் மனித வள ஆதரவுடன் 200,000/- நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த வீடமைப்புத் திட்டத்துடன் இணைந்து, போரின் போது முழுமையாக ஊனமுற்ற ஒரு போர் வீரருக்கு முச்சக்கர மோட்டார் சைக்கிளுக்கான மின்கலம் அன்பளிப்பு செய்யப்பட்டது.