Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2024 14:16:54 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரின் மூன்றாம் கட்ட வீட்டுத் திட்டத்தில் சிப்பாய்களுக்கு வீடு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டம், 2024 ஒக்டோபர் 3 ஆம் திகதி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது. இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்கள் இராணுவ வீரர்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.200,000 வீதம் இரண்டு வீடுகள் கட்டுவதற்கு ரூ.400,000 வழங்கினார்.

இந்த முயற்சியானது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினருக்கான 19 வீடுகளை நிறைவு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பரந்த திட்டமாகும். இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.