07th April 2023 21:38:48 Hours
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய அவர்கள் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் ஐக்கிய நாடுகளின் இலங்கை படையின் 13 வது குழுவில் சேவையாற்றிய நாடு திரும்பிய இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைவீரர்களின் விசேட சந்திப்பின் போது அவர்களின் விஷேட சேவையினை பாராட்டினார்.
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் ஐக்கிய நாடுகளின் இலங்கை படையின் 13 வது குழுவில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இலேசாயுத காலாட் படையணி 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்கள் கலந்துகொண்டனர். 2023 மார்ச் 8 அன்று லெபனானில் 1 வருட கால சேவையை முடித்துவிட்டு அவர்கள் நாடு திரும்பினார்கள்.
நாடு திரும்பிய அனைவரையும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு அழைத்த மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய அவர்கள் லெபனானில் அமைதி காக்கும் படையினராக தங்கியிருந்த காலத்தில் ஆற்றிய சேவைகளை பாராட்டினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.