Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd July 2023 16:53:20 Hours

இலங்கை இராணுவத்திற்கு சீனாவில் நடைப்பெற்ற ‘ஷார்ப் பிளேட்’ துப்பாக்கி சுடும் போட்டியில் ‘சிறந்த குழுப்பணி’ விருது

ஜூலை 9 முதல் 16 வரை சீனாவின் உரும்கி நகரில் இடம்பெற்ற ‘ஷார்ப் பிளேட்-2023’ சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் 18 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு சிறந்த குழுப்பணிக்கான விருது வழங்கப்பட்டது.

இப் போட்டியில் இலங்கை சார்பாக கெமுணு ஹேவா படையணியின் மேஜர் ஆர்எம்டிஎம் ரத்நாயக்க மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கேப்டன் ஆர்டிடீ பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியானது புதிதாக இணைக்கப்பட்ட சவால் மிகு ஸ்னய்ப்பிங் போட்டியில் வெவ்வேறு அளவுகள் மற்றும் இலக்குகளின் வடிவங்களான அடையாளம் கண்டு 120 வினாடிகளுக்குள் ஐந்து தோட்டக்களை சுடதல் வேண்டும். இப் போட்டியில் இரு பங்கேற்பாளர்கள் நகரும் இலக்குகளை விரைவாக இணங்கண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். 

"ஷார்ப் பிளேட் 2023" சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியானது உரும்கியில் உள்ள சீன மக்கள் ஆயுதக் காவல் படையின் பயிற்சி தளத்தில் இடம்பெற்றது. பெலாரஸ், பாகிஸ்தான், குவைத், தென்னாப்பிரிக்கா, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் அணிகள், சீன இராணுவம் மற்றும் பொலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த ஏழு துப்பாக்கி சுடும் அணிகளும் போட்டியில் பங்கேற்றன. 

இந்தப் போட்டியில் துல்லியமான துப்பாக்கி சுடுதல், நகரும்-இலக்குகளுக்கு துப்பாக்கி சுடுதல் மற்றும் நிலை-சுழற்சி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் 12 போட்டிகள் இடம்பெற்றன.