11th November 2024 09:54:55 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 'வாழும் கலை' என்ற தலைப்பில் விரிவுரை 06 நவம்பர் 2024 அன்று தலைமையக பல்லூடக மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி அனுஷா கோகுல பெர்னாண்டோ அவர்கள், படையினரின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் இந்த விரிவுரையை நடாத்தினார்.
இறுதியில், திருமதி பெர்னாண்டோ அவர்களின் பங்கேற்பைப் பாராட்டி இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி அவர்கள் நினைவுச் சின்னம் வழங்கினார். விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.