Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2024 17:56:03 Hours

இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையரினால் முதியோர் இல்லத்தில் மதிய உணவு

இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச் ஜீ சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 21 ஒக்டோபர் 2024 அன்று களுத்துறை ஜாவத்த முதியோர் இல்லத்தின் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

நிகழ்ச்சியின் போது பாரம்பரிய தர்ம சொற்பொழிவு, தானம் மற்றும் புத்த பூஜை என்பன இடம்பெற்றன.

பின்னர், முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், முதியோர்களின் பயன்பாட்டிற்காக சுகாதாரப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.