Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2024 10:00:14 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணியில் கேட்போர் கூடம் மற்றும் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா

இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கான புதிய கேட்போர் கூடம் மற்றும் விடுதிக்கான அடிக்கல் 13 பெப்ரவரி 2024 அன்று பொரளை படையணி தலைமையகத்தில் நாட்டப்பட்டது. கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பிஎஸ்சி ஐஜி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில், படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.