Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2024 15:51:02 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் வெசாக் பண்டிகை தானம்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீஎல்எஸ்சீ எஎடிஓ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. இரேஷா பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையில் 23 மே 2024 அன்று வெசாக் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தொபகொட சந்தி, யாழ் திஸ்ஸ விகாரை, வெயாங்கொட இராணுவ சீருடை நிலையம் மற்றும் பனாகொட இராணுவ விகாரை ஆகிய இடங்களில் இந்த தான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது வில்வபூ பானங்கள், குளிர்பானங்கள், பலாக்காய் அவியல் மற்றும் கொத்தமல்லி பானங்கள், போன்றன பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பண்டிகை உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் வழங்கப்பட்டன.

இந்த தொண்டு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது துனைவியர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.